Monday, July 28, 2008

உணர்வுகள்

உணர்வுகளின் தவறான பரிமாற்றத்தால் பலரும் வாழ்க்கையில் துன்பப்பட்டு வருகிறார்கள், அதற்கு காரணம், சிலர் அறியாமலும், பலர் அறிந்தும் உணர்களை தவறாக பரிமாற்றிக்கொள்வதே! "அன்பு, பண்பு, பரிவு, பாசம், பக்தி, நேசம், காதல், மரியாதை, விரோதம்"
இவை அனைத்தும் நாம் நமது வாழ் நாளில் உணரகூடிய உணர்வுகளின் பெயர்சொற்கள்.
அன்பு- அன்னையிடதிலும்
பண்பு- தந்தையிடதிலும்
பரிவு- விலங்கிடதிலும்
பாசம்- சகோதரர்களிடதிலும்
பக்தி- கடவுளிடத்திலும்
நேசம்- நண்பர்களிடதிலும்
காதல்- மனைவியிடதிலும்
மரியாதை- முதியவரிடதிலும்
விரோதம்- வேண்டாத நண்பரிடதிலும்

இப்படி உறவுகளின் உணர்வுகளை நம் முன்னோர் வகைப்படுத்தி வைத்துள்ளனர். இதில் எந்தயிடத்திலும் சற்று மாறியோ, கூடவோ, அல்லது குறையவோ இந்த உணர்வுகள் இருப்பாறாயின் அங்கே பிரச்சனை அழையா விருந்தாலியாக வந்துவிடுகிறார்.
மேலை நாடுகளில் இந்த ஒட்டு மொத்த உறவுகளின் உணர்வுகளுக்கும்"LOVE" என்ற ஒரே ஒரு சொல் பயன்படுத்துகிறார்கள். அதனால்தான் அங்கே உறவுகளின் அடிப்படையில் சற்றே பிரச்சனைகள் அதிகப்படியாக காணப்படுகின்றன. அதற்காக நம் போற வளரும் நாடுகளில் பிரச்சனைகளேயில்லை என்றும் சொல்வதற்க்கில்லை, ஆனால் நமக்கு தேவையற்ற உணர்வுகளை நீக்கி சுமூகமாக வாழ்வதற்கு அதிக வழிகள் உள்ளன என்பதையும் நாம் மறுப்பதற்க்கில்லை.
ஆகவே நண்பர்களே, உணர்வுகளை சரியானயிடத்தே பறிமாற்றம் செய்யுங்கள் மனநிம்மதி பெற்று மகிழ்ச்சியில் திளையுங்கள்.

please comment below or email me..

கடவுள்

கடவுள் உண்டா? இல்லையா?!॥ இந்த உலகத்தில் உள்ள அனைத்து மதத்தினறாலும் கேட்கப்படும் ஒருக் கேள்வி। விடை தெரியாவிட்டாலும், இல்லை என்று தெரிந்தாலும்(நாத்திகம் பேசுவதாக எண்ண வேண்டாம்) அதை தைரியமாகச் சொல்ல ஒரு பயம். எங்கே கடவுள் இல்லை என்று சொல்லிவிட்டால் ஏதாவது அவதூறாக நடந்துவிடுமோ என்று உள்ளுற நம்மை அறியாமல் ஒரு பயம்.
எனக்குள் எழுந்த சில சிந்தனைகளை உங்களுடன் பகிர்வதில் தவறென்றும் இல்லை என்று நினைக்கிறேன்.
இயேசு பிரான் சிலுவையில் அறையப்படுவதற்கு முன் நாள், "கர்தாவே இவர்கள் என்ன செய்கிறோம் என்று அறியாமலேயே செய்கிறார்கள்" என்று பிராத்தனை செய்கிறார்.!?
(பொருங்கள்) இன்னும் இருக்கிறது
முகமது நபி மெக்காவிலிருந்து மதினாவுற்கு துறத்தப்பட்டபோது அவரும் வேறொருவரிடம் இயேசு பிரான் போலவே முறையிடுகிறார். பகவத் கீதைக்கு வருவோம், கண்ணனும் நானே எல்லாமுமாக இருக்கிறேன் என்று கூறுகிறார்கள், இவர்கள் மடுமல்லாமல், அனைத்து மதமும், ஈஸ் என்றும், அல்லா என்றும் புத்தன் என்றும் இயேசு என்றும் இன்னும் பல பல மதங்களால் வழிப்பட்டு வருகிறோம்.
இவர்கள் அனைவரும் யாரை குறிப்பிடுகிறார்கள், அப்படி இவர்கள் வேறு ஒருவரை கடவுளாக கூறுவாராயின், நாம் ஏன் இவர்களை வணங்க வேண்டும்.?!
சரி விஷயத்திற்கு வருவோம்.
இவ்வாறாக என்றைக்குமே கிழக்கும் மேற்குமாக, விஞ்ஞானமும், மெய்ஞானமும் இருந்து வருகிறது, ஆனால் இவர்கள் எல்லோறாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பது மூலம்(கூறு) ஒன்று உண்டு என்பது.
மெய்ஞானம் "வினை விதைத்தவன் வினை அறுப்பான் தினை விதைத்தவன் தினை அறுப்பான்" என்றும், விஞ்ஞானமும் (there is every action qualent and opposite reaction) "வினைக்கேற்ற செயல் விளையும்" என்றும் சொல்கிறது.

ஆகவே நண்பர்களே நல்லதையே நினையுங்கள் கடவுள் இருந்தால் உங்களுக்கு அருள் பாவிக்கட்கு, நல்லதையே நடைமுறைப்படுத்துங்கள் கடவுள் இல்லாதிருந்தாலும் மணிதநேயம் வளரட்டும்.
வீனான குழப்பத்ற்கும், வேண்டாத கேள்விகளுக்கும் மனதை அலையவிடாமல், மணிதநேயம் வளர வழிவிடுங்கள்.

please comment below or email me..

Sunday, July 27, 2008

ஆசை

ஆசை:-
ஆசை இந்த சொல்லைக் கேட்கும்போதே ஆசையாக இருக்கிறது. சரி விஷயத்திருக்கு வருவோம்.
ஆசையே அனைத்து அழிவிற்கும் காரணம் என்கிறது -பொளத்த மதம். ஆசையை அடக்கினால் அனைத்தையும் அடையலாம், பேராசை பெருநஷ்டம், இப்படியெல்லாம் பல கருத்துக்கள் ஆண்டான்டு காலமாக அனைவராலும் சொல்லப்பட்டும், கேட்கப்பட்டும் வருகிறோம்.
இது சரிதானா? ஆசையை அடக்க வேண்டும் என்று நினைத்தலே ஒரு ஆசைதானே அதெப்படி ஆசையை அடக்குவது(சரிசெய்வது)?.
இதைப் பற்றி எழுதும் போது நான் என் கல்லூரி காலத்தி எழுதிய கவிதை ஒன்று நினைவிற்கு வருகிறது, அதை இங்கே சொல்வதில் ஒன்றும் தவறில்லை என்று நினைக்கிறேன்.
"மனமென்னும் மாளிகையில்
நிறையவே சிற்றரைகள்
சிற்றரைகள் அனைத்திலும்
ஆசை என்னும் ஒட்டடைகள்;
ஒட்டடைகள் அனைத்தையும்
ஒழித்துவிட ஆசைதான்- ஆனால்
அதுவும் ஓர் ஒட்டடையாய் அடி மனதில் படியும்போது;
பாழும் மனம் அழுவதன்றி அது என்னச் செய்யும் பாவம்!?"
மணித இனமே ஆசை(இச்சை)யின் காரணமாக பிறந்தவர்கள், அப்படியிருக்க அவர்களால் எப்படி ஆசையிறி வாழமுடியும், சரி, அப்படியென்றால் இதற்க்கு என்னதான் வழி!!
இந்த வையத்தில் கேட்கப்படும் அனைத்துக் கேள்விகளுக்கும் அங்கேயே பதிலும் இருக்கிறது. அது தேடுபவரின் மனநிலையைப் பொருத்து விடை சிறியதாகவோ பேறியதாகவோ அமைந்துவிடுகிறது. - உதாரணத்திற்க்கு
கோவில், அதை மூடும் கதவு பெரியதாக் இருக்கிறது, ஆனால் அதை திறக்கும் பயன்படும் தாழ்பாலோ மிகவும் சிறியது, அதில் புட்டப்பட்டிருக்கும் பூட்டு அதனினும் சிரியது, அப்பூடை திரக்க பயன்படும் சாவியோ மிகமிக சிரியது- ஆகவே
உங்கள் ஆசை உண்டான இடத்தையும் அது தேவைதான என்ற கேள்வியையும் உங்களை நீங்களேக் கேட்டுப்பாருங்கள். விடை உங்கள் அருகாமையில்..
இதை சொல்லும் போது "ஜான் கென்னடி" பற்றி ஒரு குறிப்பு தற கடமைப்பட்டுள்ளேன்.
ஒரு சமையம் "ஜான் கென்னடி" தன் நண்பறோடு ஒரு மிகப்பெரிய பல் பொருள்அங்கடிக்கு சென்றிருந்தார் 3 மணி நேரம் அக்கடையை சுற்றிப் பார்த்துவிட்டு பின் எதையும் வாங்காமல் வெளியே வந்தார், அவறோடு வந்த நண்பர் அவரைப் பார்த்து ஏன் எதையும் வாங்கவில்லை என்றுக் கேட்டார் அதற்க்கு அவர்ச் சொன்ன பதில் என்னத் தெரியுமா?
இந்த உலகத்தில் எனக்கு தேவயற்றப் பொருள் எவ்வளவு இருக்கிறது என்பதை பார்க்கவே அக்கடையுள் சென்றேன் என்றார்.
ஆகவே நண்பர்களே
ஆசை இருக்கும் வரை தேடல் இருக்கும்.
"ஆசை" என்பதை "தேவை" என்று எடுத்துக்கொள்ளுங்கள். தேவயற்ற எண்ணங்களை நீக்கிவிட்டால் வாழ்வு வளம் பெரும்.

please comment below or email me..

Thursday, July 24, 2008

கருவாச்சி காவியம்.

கவி பேரரசு வைரமுத்துவின் கருவாச்சி காவியம். pdf format இங்கே இறக்கம் செய்துக் கொல்வும்.

Thursday, July 10, 2008

விஞ்ஞான வளர்ச்சி..!?

விஞ்ஞான வளர்ச்சி
காந்திக்கு கைத்துப்பாக்கி;
இந்திராவுக்கு இயந்திரத் துப்பாக்கி;
இராஜுவுக்கு மனித வெடிகுண்டு...!?

Tuesday, July 8, 2008

Bheema-video song

Kreedam-Akkam Pakkam

அர்த்தமுள்ள இந்து மதம்

அர்த்தமுள்ள இந்து மதம் mp3 format

Sivaji- video song

முத்திக்கென்றெ

பச்சைக் குழந்தைக்கு பாலும் இல்லை
அதன்
பட்டினி அழுகைக் கேட்க்கவில்லை
இச்சையுடன் பாலை சாமிக்கென்றெ
இட்டு மகிழ்கின்றார் கல்லில் முத்திக்கென்றெ:-

வருந்தவில்லை

எத்தனையோப் பேர் பாடியும் நாடு இன்னும் திருந்தவில்லை;
அதற்க்கு:-
இத்தனை நாளாகியும் மனிதன் ஏனோ வருந்தவில்லை;