ஆசை:-
ஆசை இந்த சொல்லைக் கேட்கும்போதே ஆசையாக இருக்கிறது. சரி விஷயத்திருக்கு வருவோம்.
ஆசையே அனைத்து அழிவிற்கும் காரணம் என்கிறது -பொளத்த மதம். ஆசையை அடக்கினால் அனைத்தையும் அடையலாம், பேராசை பெருநஷ்டம், இப்படியெல்லாம் பல கருத்துக்கள் ஆண்டான்டு காலமாக அனைவராலும் சொல்லப்பட்டும், கேட்கப்பட்டும் வருகிறோம்.
இது சரிதானா? ஆசையை அடக்க வேண்டும் என்று நினைத்தலே ஒரு ஆசைதானே அதெப்படி ஆசையை அடக்குவது(சரிசெய்வது)?.
இதைப் பற்றி எழுதும் போது நான் என் கல்லூரி காலத்தி எழுதிய கவிதை ஒன்று நினைவிற்கு வருகிறது, அதை இங்கே சொல்வதில் ஒன்றும் தவறில்லை என்று நினைக்கிறேன்.
"மனமென்னும் மாளிகையில்
நிறையவே சிற்றரைகள்
சிற்றரைகள் அனைத்திலும்
ஆசை என்னும் ஒட்டடைகள்;
ஒட்டடைகள் அனைத்தையும்
ஒழித்துவிட ஆசைதான்- ஆனால்
அதுவும் ஓர் ஒட்டடையாய் அடி மனதில் படியும்போது;
பாழும் மனம் அழுவதன்றி அது என்னச் செய்யும் பாவம்!?"
மணித இனமே ஆசை(இச்சை)யின் காரணமாக பிறந்தவர்கள், அப்படியிருக்க அவர்களால் எப்படி ஆசையிறி வாழமுடியும், சரி, அப்படியென்றால் இதற்க்கு என்னதான் வழி!!
இந்த வையத்தில் கேட்கப்படும் அனைத்துக் கேள்விகளுக்கும் அங்கேயே பதிலும் இருக்கிறது. அது தேடுபவரின் மனநிலையைப் பொருத்து விடை சிறியதாகவோ பேறியதாகவோ அமைந்துவிடுகிறது. - உதாரணத்திற்க்கு
கோவில், அதை மூடும் கதவு பெரியதாக் இருக்கிறது, ஆனால் அதை திறக்கும் பயன்படும் தாழ்பாலோ மிகவும் சிறியது, அதில் புட்டப்பட்டிருக்கும் பூட்டு அதனினும் சிரியது, அப்பூடை திரக்க பயன்படும் சாவியோ மிகமிக சிரியது- ஆகவே
உங்கள் ஆசை உண்டான இடத்தையும் அது தேவைதான என்ற கேள்வியையும் உங்களை நீங்களேக் கேட்டுப்பாருங்கள். விடை உங்கள் அருகாமையில்..
இதை சொல்லும் போது "ஜான் கென்னடி" பற்றி ஒரு குறிப்பு தற கடமைப்பட்டுள்ளேன்.
ஒரு சமையம் "ஜான் கென்னடி" தன் நண்பறோடு ஒரு மிகப்பெரிய பல் பொருள்அங்கடிக்கு சென்றிருந்தார் 3 மணி நேரம் அக்கடையை சுற்றிப் பார்த்துவிட்டு பின் எதையும் வாங்காமல் வெளியே வந்தார், அவறோடு வந்த நண்பர் அவரைப் பார்த்து ஏன் எதையும் வாங்கவில்லை என்றுக் கேட்டார் அதற்க்கு அவர்ச் சொன்ன பதில் என்னத் தெரியுமா?
இந்த உலகத்தில் எனக்கு தேவயற்றப் பொருள் எவ்வளவு இருக்கிறது என்பதை பார்க்கவே அக்கடையுள் சென்றேன் என்றார்.
ஆகவே நண்பர்களே
ஆசை இருக்கும் வரை தேடல் இருக்கும்.
"ஆசை" என்பதை "தேவை" என்று எடுத்துக்கொள்ளுங்கள். தேவயற்ற எண்ணங்களை நீக்கிவிட்டால் வாழ்வு வளம் பெரும்.
please comment below or email me..
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment