Monday, July 28, 2008

கடவுள்

கடவுள் உண்டா? இல்லையா?!॥ இந்த உலகத்தில் உள்ள அனைத்து மதத்தினறாலும் கேட்கப்படும் ஒருக் கேள்வி। விடை தெரியாவிட்டாலும், இல்லை என்று தெரிந்தாலும்(நாத்திகம் பேசுவதாக எண்ண வேண்டாம்) அதை தைரியமாகச் சொல்ல ஒரு பயம். எங்கே கடவுள் இல்லை என்று சொல்லிவிட்டால் ஏதாவது அவதூறாக நடந்துவிடுமோ என்று உள்ளுற நம்மை அறியாமல் ஒரு பயம்.
எனக்குள் எழுந்த சில சிந்தனைகளை உங்களுடன் பகிர்வதில் தவறென்றும் இல்லை என்று நினைக்கிறேன்.
இயேசு பிரான் சிலுவையில் அறையப்படுவதற்கு முன் நாள், "கர்தாவே இவர்கள் என்ன செய்கிறோம் என்று அறியாமலேயே செய்கிறார்கள்" என்று பிராத்தனை செய்கிறார்.!?
(பொருங்கள்) இன்னும் இருக்கிறது
முகமது நபி மெக்காவிலிருந்து மதினாவுற்கு துறத்தப்பட்டபோது அவரும் வேறொருவரிடம் இயேசு பிரான் போலவே முறையிடுகிறார். பகவத் கீதைக்கு வருவோம், கண்ணனும் நானே எல்லாமுமாக இருக்கிறேன் என்று கூறுகிறார்கள், இவர்கள் மடுமல்லாமல், அனைத்து மதமும், ஈஸ் என்றும், அல்லா என்றும் புத்தன் என்றும் இயேசு என்றும் இன்னும் பல பல மதங்களால் வழிப்பட்டு வருகிறோம்.
இவர்கள் அனைவரும் யாரை குறிப்பிடுகிறார்கள், அப்படி இவர்கள் வேறு ஒருவரை கடவுளாக கூறுவாராயின், நாம் ஏன் இவர்களை வணங்க வேண்டும்.?!
சரி விஷயத்திற்கு வருவோம்.
இவ்வாறாக என்றைக்குமே கிழக்கும் மேற்குமாக, விஞ்ஞானமும், மெய்ஞானமும் இருந்து வருகிறது, ஆனால் இவர்கள் எல்லோறாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பது மூலம்(கூறு) ஒன்று உண்டு என்பது.
மெய்ஞானம் "வினை விதைத்தவன் வினை அறுப்பான் தினை விதைத்தவன் தினை அறுப்பான்" என்றும், விஞ்ஞானமும் (there is every action qualent and opposite reaction) "வினைக்கேற்ற செயல் விளையும்" என்றும் சொல்கிறது.

ஆகவே நண்பர்களே நல்லதையே நினையுங்கள் கடவுள் இருந்தால் உங்களுக்கு அருள் பாவிக்கட்கு, நல்லதையே நடைமுறைப்படுத்துங்கள் கடவுள் இல்லாதிருந்தாலும் மணிதநேயம் வளரட்டும்.
வீனான குழப்பத்ற்கும், வேண்டாத கேள்விகளுக்கும் மனதை அலையவிடாமல், மணிதநேயம் வளர வழிவிடுங்கள்.

please comment below or email me..

No comments: