Friday, August 22, 2008

ஹோமியோபதி

ஜெர்மன் நாட்டின் மருத்துவப் புரட்சியாளர், மருத்துவச் சீர்திருத்தவாதி,ஹோமியோபதி மருத்துவத் தந்தை டாக்டர் ஹானிமன் ஒரு சிரஞ்சீவி (1755-1843). அவர் நிறுவிய புதிய மருத்துவ முறையின் பெயரை "ஹோமியோபதி" என்றார். அவர் காலத்தில் பின்பற்றப்பட்ட மருத்துவத்திற்கு "அலோபதி" என்று புதுப்பெயரிட்டார். இன்றளவும்இம்மேதை இட்ட பெயரை உலகம் பயன்படுத்தி வருகிறது. எனவே ஹானிமன் இன்றும் வாழ்கிறார்.

1810 இல் தமது வேதப்புத்தகமான (Bible of Homeopaths) ஆர்கனான் நூலைவெளியிட்டார். எனவே ஹோமியோபதியின் வயது 191. "நவீன மருத்துவம்" (Modern Medicine) என்ற பெயர் ஹோமியோபதிக்குத்தான் பொருந்தும். இதற்கு மாறாக, அலோபதி மருத்துவர்கள் தமது பாராட்மபரிய மருத்துவத்தை "நவீன மருத்துவம்" என்றும்,ஹோமியோபதியை விஞ்ஞான அடிப்படையற்ற, மறைந்து வரும் பழைய மருத்துவம் என்றும் கூறுகின்றனர். எனவே ஹோமியோபதி மருத்துவ முறையில் அடைந்துள்ள வெற்றிகளை அலட்சியப்படுத்திப் பேசுகின்றனர்! அலோபதி மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர்கள்மருந்தில்லாத மாத்திரைகளை நோயாளிகளைச் சமாதானப்படுத்துவதற்காகக் கொடுக்கும்போது "ஹோமியோபதிக் டோஸ்" என்று கூறுவது வழக்கம். இருப்பினும் தற்போது ஹோமியோபதி மருத்துவத்தின் சிறப்பை அனுபவித்து கற்றுணர்ந்த அலோபதி மருத்துவர்கள் பலரும் ஹோமியோபதி மருத்துவர்களாக மாறியுள்ளனர். M.B.B.S பட்டம் பெற்ற சிலமருத்துவர்களின் பெயர் பலகைகளில் "ஹோமியோபதி கிளினிக்" என்று காணப்படுகிறது.

ஹானிமன் இன்றும் வாழ்கிறார்! ஹோமியோபதியின் வித்து ஹானிமன் வாழ்ந்த காலத்திலேயே இந்திய மண்ணில் விழுந்து விட்டது. அதுவும் ஆங்கில ஆட்சியும் ஆங்கில மருத்துவத்தின் (அலோபதி) ஆதிக்கமும்இருந்த காலத்தில் பஞ்சாப், வங்காளம், தமிழ்நாடு ( தஞ்சை) ஆகிய பகுதிகளில் விதைக்கப்பட்ட ஹோமியோபதி மருத்துவம் இந்தியாவில் ஆல் போல் பரந்து அருகுபோல் வேரோடிவிட்டது. அமெரிக்க, ஐரோப்பிய ஹோமியோபதி மருத்துவ மேதைகளின் புத்தகப் பதிப்புரிமைகளை இந்தியர்கள் வாங்கிவிட்டனர். இந்தியாவில் தான் ஹோமியோபதிக்கெனதனி மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. மருந்து தயாரிப்பு நிறுவனங்களும் இயங்கி வருகின்றன.

ஹானிமன் மருத்துவம் இந்தியக் கலாச்சாரப் பாரம்பரியத்திற்கு ஒத்து வருவதால் ஹோமியோபதிக்கு இந்தியாவில் ஒளிமயமான எதிர்காலம் நிச்சயம் உண்டு. இருப்பினும் உலகமயமாக்கல் (Globalisation) என்ற இயக்கத்தில் அலோபதி மருத்துவத்தின் ஆதிக்கம் ஓங்கி வருகிறது. பணக்கார நாடுகளுக்கு ஏற்றது அலோபதி மருத்துவம். இந்தியப்பாரம்பரியத்திற்கு எதிரானது. அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம் ஆகியவைகளுக்காக அல்லாடும் ஏழை இந்தியக் குடிமக்களுக்கு ஏற்றது ஹோமியோபதி மருத்துவம்தான். உலகமயமாக்கலினால் நமது பாரம்பரிய மருத்துவ மூலிகைகளுக்குஆபத்து ஏற்பட்டு வருகிறது.

நேர் மருத்துவத் தத்துவம் மிகக் குறைந்த அளவு மருந்தை வலியுறுத்துகிறது. வீரியப்படுத்தப்படும் (Potency Drugs) மருந்தைக் கொடுக்கிறது. மனிதர்களிடம் பரிசோதனை செய்யப்பட்ட (Proved on Human Beings) மருந்துகளின் குணங்கள் நிரந்தரமானவை. மனநோயாளிகளிடம் இரக்கம் காட்டியவர் ஹானிமன். ஒரு குறிப்பிட்ட உறுப்பை மட்டும் குணப்படுத்துவது இயற்கை விதிகளுக்கு மாறுபாடானது. மனிதனின்கனவுக் குறிகள் உட்பட உடலை நுணுக்கமாக ஆராய்ந்து பதிவு செய்த பின்தான் ஹோமியோபதி மருத்துவர் மருந்தை நாடுவார். மருந்துகள் அனைத்தும் இனிப்பு உருண்டைகள் வடிவில், தூய வெண்ணிறத்தில் அமைந்துள்ளது. இது ஹோமியோபதிக்கே உரிய தனிச்சிறப்பு. சிக்கனம் இதன் அடிப்படையான பலம். இஞ்செக்ஷன், ஆபரேஷன், விலை உயர்ந்த மருத்துவக் கருவிகள், பரிசோதனைக் கூடங்கள் முதலியவற்றை பயன்படுத்தி சிகிச்சை செய்வது அலோபதி மருத்துவம். நோயாளிகளைப்பரிசோதித்து விட்டு மருந்தைக் கொடுத்து ஒரு ஹோமியோபதி மருத்துவர் குணப்படுத்திவிட முடியும். ஆனால் எதிர் மருத்துவத்தில் பல விதமான நவீனக் கண்டுபிடிப்புகளின் உதவியின்றி சிகிச்சை செய்ய முடியாது! இது கண்கூடாகக் காணும் உண்மை.

ஹோமியோபதி முறையின் தத்துவம் நியூட்டனின் புவியீர்ப்பு விசைத் தத்துவத்தைப் போல் நிரந்தரமானது . நோயின் பெயரைப் பற்றியோ, கிருமிகளைப் பற்றியோ ஹோமியோபதி கவலைப்படுவதில்லை. மாறாக உடலில் விமரிசையாக இயங்கும் இயற்கை ) சக்திக்கு ஆதரவாகமருந்துகள் மிகக் குறைந்த அளவில், வீரியப்படுத்திய பின் கொடுக்கப்படுகிறது.
இதனால் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகி நோயைப் போக்குகிறது. ஹானிமனின் இந்தத் தத்துவம் அலோபதிக்கு முற்றிலும் எதிரானது. எனவே ஹோமியோபதி மருத்துவத்தில் குணமாகும் நோய்களை (Wonder Cures) அலோபதி மருத்துவர்கள் நம்பமறுக்கிறார்கள்! "ஹோமியோபதி மருந்துகளில் மருத்துவச் சரக்கு இல்லை! எனவே வேலை செய்யாது" என்று வாய்கூசாது கூறுகின்றனர். பெனிசிலின் கண்டுபிடிக்கப்பட்ட போது, "சர்வரோக நிவாரணி" என்று புகழப்பட்டது. பிற்காலத்தில் அதன் அபாயகரமான பின்விளைவுகளைக் கண்டு ஒதுக்கப்பட்டது. இந்த மாதிரியான நிலை ஹோமியோபதியில்இல்லை. 100 ஆண்டுகளுக்கு முன் "புரூப்" செய்யப்பட்ட மருந்துகள் இன்றைக்கும் அற்புதமாக வேலை செய்கின்றன! காரணம், ஒத்தது ஒத்ததை குணப்படுத்தும் (Similia Simibilus Curantur) என்ற விஞ்ஞானப் பூர்வமான தத்துவத்தில் டாக்டர் ஹானிமன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். பல அற்புதமான நோய்களைக் குணப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

உலக சாதனை படைத்த 8 வயது மாணவி

*இந்தியா : மைக்ரோசொப்டின் இணையத்தள தேர்வில் உலக சாதனை படைத்த 8 வயது மாணவி*
கடந்த மாதம் மைக்ரோசொப்ட் நிறுவனம் நடத்திய இணையத் தள தேர்வில் 1000க்கு 842 புள்ளிகளைப் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்து மதுரையைச் சேர்ந்த மாணவி ஒருவர் உலக சாதனை புரிந்துள்ளார்.

கலை, கவிதை, பாட்டு, ஒவியம், கணனி போன்ற பல துறைகளில் அபரிமிதமான ஆற்றல் பெற்றவர்களுக்கு இளம் வயது சாதனையாளர் விருது வழங்கப்படுவது வழக்கம். இதனை 13 வயதுக்கு உட்பட்டவர்கள் பெற முடியும். அந்த வகையில், தனது 6ஆவது வயதில் கணனி அனிமேஷன், மல்டிமீடியா துறையில் பல்வேறு படிப்புகளை பூர்த்தி செய்துள்ள லவிணாஸ் (தற்போது 8 வயது) அகிட்பீடியா மற்றும்ரிலையன்ஸ் இணைய உலகம் நடத்திய இணையத் தள தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.

மேலும் கணனித் துறையில் அதி விசேட திறமை விருதும் பெற்றுள்ளார். இவர் கடந்த மாதம் மைக்ரோசொப்ட் நிறுவனம் நடத்திய இணையத் தள தேர்வில் அதிக புள்ளிகளைப் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்து உலக சாதனை புரிந்துள்ளார். இதற்காகஅவருக்கு எம்.சி.பி.. சான்றிதழ் வழங்கப்பட்டது.
இது குறித்து லவிணாஸ் கூறியதாவது: இது, கணனி பயிலும் மாணவர்களின் கணிக்கும் திறன், ஆங்கிலம் நுண்ணறிவுத் திறன், தொழில் நுட்பதிறன் உள்ளிட்ட பல திறமைகளை சோதிக்கும் தேர்வு ஆகும். இதற்கு 25 முதல் 30 வயதுள்ள மாணவர்கள் தோற்றுவதுவழக்கம்.
முன்பு பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஆர்பாகரிம் ரந்தாவா என்ற சிறுமி தனது 10ஆவது வயதில் இத்தேர்வை எழுதி வெற்றி பெற்றது சாதனையாக இருந்தது. ஆனால் தற்போது நான் 8 வயதிலேயே தேர்ச்சி பெற்று உலக சாதனை புரிந்துள்ளேன் என்றார்.
இனிய நண்பர்களுக்கு,
பெரும்பாளும் நமக்கு கிடைக்கும் அகராதிகள்(dictionary) English to English, மட்டுமே இதோ இங்கே உள்ள சுட்டியை click செய்து, தமிழ் அகராதியை பெற்றுப் பயன் பெருங்கள்.
Please comment Below or Email me

Saturday, August 16, 2008

தமிழில் எப்படி எழுதுவது

அடிக்கடி என்னிடம் கேட்கப்படும் ஒரு கேள்வி.நீங்கள் தமிழில் எப்படி எழுதுகின்றீர்கள்? நான் தமிழில் எழுத என்ன செய்ய வேண்டும்? போன்றன.

இங்கே என் விளக்கங்கள்.நீங்கள் தமிழில் எப்படி எழுதுகின்றீர்கள்?ஆரம்பத்தில் Kuralsoft எனும் அழகிய எளிய இலவச மென்பொருள் ஒன்றை தான் பயன்படுத்தி வந்தேன்.இதன் வழி நேராக Notepad-ல் தமிழில் தட்டச்சலாம் அல்லது நேராகவே பிளாகிலேயே தட்டச்சலாம். பிரச்சனை இல்லாதிருந்து வந்தது. என்னநினைத்தார்களோ சமீபத்தில் அதற்கு விலையை குறித்து விட்டார்கள்.

தமிழில் எழுத இலவச மென்பொருள்கள் இன்னும் இருப்பதால் அவைகளுக்கு தாவ வேண்டி வந்தது. இப்போது ஈகலப்பை எனும் மென்பொருளை பயன்படுத்துகின்றேன்.

தமிழில் எழுத என்ன செய்ய வேண்டும்?நீங்களும் தமிழில் Notepad-லோ அல்லது Gmail-லிலோ தமிழில் எழுதலாம். முதலில் கீழ்கண்ட சுட்டியிலிருந்து eKalappai எனும் மென்பொருளை இறக்கம் செய்து கொள்ளுங்கள்


பின் கீழ்கண்ட சுட்டியிலிருந்து கீபோர்டு Tamil unicode .kmx கோப்பை இறக்கம் செய்து அதை ஈகலப்பையில் பயன்படுத்துங்கள்


குழப்பமாய் இருக்கிறதா? இதோ படிப்படியாக செய்முறை உங்களுக்காக..

1. eKalappai-யை இறக்கம் செய்து உங்கள் கணிணியில் நிறுவவும். சும்மா Install-யை கிளிக் பண்ணி மற்ற எல்லா வற்றையும் பட்பட்டென கிளிக்கி செல்லவும்.கீழே அந்த ஆரம்ப படம்.
2. eKalappai நிறுவி முடித்ததும் கீழே படத்தில் இடதுகோடியில் காண்பது போல புதிதாய் ஒரு ஐகான் (TavulteSoft Keyman 6.0) உங்கள் கணிணியில் வரும்.
3. அந்த ஐகானை வலது கிளிக்செய்து keyman configuration. ..-ஐ கிளிக்கவும்.
4. அதிலுள்ள Install Keyboard-யை கிளிக்கி ஏற்கனவே இறக்கம் செய்து வைத்துள்ள NewUniTamil. kmx கோப்பை நிறுவவும்

5. முடிவில் இப்போது மூன்று கீபோடுகள் இருக்கும். அதில் Tamil99UNI,Tamil99T sc இரண்டிலும் உள்ள டிக் மார்க்கை நீக்கிவிடவும்.UniTamil மட்டும் டிக் இருக்கட்டும்.

6. இப்போது Alt மற்றும் 2 கீகளை சேர்த்து அமுக்கினால் நீங்கள் தமிழில் எழுத தயார். Notepad-யை திறந்து தமிழில் எழுதலாம்.உதாரணமாய் அம்மா என்பதை ammaa எனவும் ஆசை என்பதை aasai எனவும் டைப்பவேண்டும். இதை Tamil Transliteration என்பார்கள். மீண்டும் Alt மற்றும் 2 கீகளை சேர்த்து அமுக்கினால் ஆங்கிலத்துக்கு போய் விடுவீர்கள்.பயர்பொஸ் உலாவியில் தான் தமிழ் யுனிகோட் பிரச்சனை உள்ளது. அதனை கீழ் கண்டவாறு சீர் செய்யலாம்

1. முதலில் windows XP with Service pack 2 இறுவட்டை CD Drive க்குள் போட்டுக்கொள்ளவும். பின்னர் க்ண்ட்ரோல் பனெலிற்கு போய் Regional & Language Options என்னும் ஐக்கனை கிளிக் பண்ணவும்.

2. அதில் language என்னும் Tab இனை கிளிக் பண்னவும்.

3. அதில் supplemental language supportஏனும் option இல் இரண்டு தெரிவுகள் இருக்கும்

*. install files for complex scripts and right to left language (including Thai)*install files for east Asian languages

இதில் முதலாவதை தெரிவு செய்த பின்பு apply button ஐ சொடுக்கினால் வின்டோஸ் எக்ஸ்பி சீடியிலிருந்து தமிழ் யுனிகோட்டுக்கு தேவையான விபரங்களை தானாகவே அது பதிவு செய்து கொள்ளும்.

பின்பு கணினியை மீள ஆரம்பிக்கவும்.

அவ்வளவு தான்

Tuesday, August 5, 2008

சில நேரங்களில் - பாகம் 2

ரமேஷ்: லாரியில் ஏரி அமர்ந்து, ட்ரைவரை ஒரு லுக்கு விட்டன்,ட்ரைவர்: என்னடா அப்படி பாக்குற,
ரமேஷ்: இல்ல, இதுக்கு முன்னாடி நீங்க ராக்கட் ஓட்டி இருக்கிங்களா
ட்ரைவர்: இல்ல, ஏன் கேக்குற
ரமேஷ்: உங்கள பாத்தா கல்பனா சாவ்லா மாதிரி இருக்கு
ட்ரைவர் வேட்கத்தேடு தன்னை தற்ப்பெருமை பட்டுக்கெள்வதற்குள், கிளி£னர் பையன் கலுக்கென சிரித்தான்.
ட்ரைவர்: அவனை பார்த்து முறைத்தான், என்னடா சிரிப்பு ராஸ்கல்
கிளீனர்: தோடா அவ இன்னா சொன்னானு தெரியாம என்ன திட்ர,
ட்ரைவர்: இன்னடா சொன்னா அவன்,
கிளீனர்: கல்பனா சாவ்லா பொம்பள
ட்ரைவர்: அதனால இன்னா
கிளீனர்: யேவ் நீ மன்னுயா
ட்ரைவர்: ஏ
கிளீனர்: பின்ன அவ உன்ன பொட்டனு சொல்றான்.
ட்ரைவர்: சரி எடம் வந்துருச்சி எறங்குடா சொட்ட.
முறைத்தபடி இறங்கினான் கிளீனர்----
ரமேஷ் தன் சீருடை போட்டுக்கொண்டு வந்தான், அவனுடைய சூப்பர்வைசர் அவனை பார்த்து
சூப்பர்வைசர்: ரமேஷ் உனுக்கு இன்னைக்கு மடிப்பாக்கம் ஏரியால டூட்டி, என்றார்,வழக்கம்போல யாரையும் கிண்டல்ப்பன்னாமல், ஒழுங்கா வேலையை பாக்கனும்.
ரமேஷ்: சொரிங்ன,
சூப்பர்வைசர்: என்ன
ரமேஷ்: சரிங்கன
சூப்பர்வைசர்: ம் அது.
ரமேஷ்: அன்னே நேத்திக்கு உங்க ஒய்ப்ப(wife) மார்க்கட்ல பாத்தேன், இப்போ நடிகை சாவித்திரியபாத்தா எப்டி இருப்பாங்களே அப்டி இருக்காங்கனே
சூப்பர்வைசர்: சரி உடு நாளைக்கு ஓட்டி தறேன், என்று சொல்லி முடிப்பதற்குள் பின்னாலிருந்து கிளீர்பையன் சிரித்தான்,
சூப்பர்வைசர்: ஏன்டா சிரிக்குற,
கிளீனர்: அன்னே அவ இன்னா சொன்னானு உனக்கு புரியலல்ல
சூப்பர்வைசர்: இன்னா சொன்னான்டா,
கிளீனர்: அண்ணிய பாத்து, இப்போ சாவித்திரி இருந்தா எப்டி இருப்பாங்களே அப்டி இருக்காங்கனானேஅதுக்கு இன்னா அருத்தம் தெரியுமா? இப்போ சாவித்திரிய தோண்டி எடுத்தா எப்டி இருப்பாங்களே அப்டிஇருக்காங்கனு அர்த்தம், அதாவது அண்ணிய பொனம்னு சொல்றானே
சூப்பர்வைசர்: எங்கட அவன் என்று திரும்பி பார்பதற்குள் சிட்டாய் பறந்தான் ரமேஷ்
தொடரும்.....

சில நேரங்களில் - பாகம் 1

ஆயிரம்தான் சொல்லு, உன்ன மாதிரி வராதுடா; பணம், காசு, பொளசு, வந்தாலும், பழச மறக்காமல், என்று பேசி முடிப்பதற்க்குள், ரமேஷ் குறுக்கிட்டு, போதும் நிருத்துடா ஒரு டம்லர் எச்ச டீக்கு ஒருப்பக்க டையலாக், 10 ரூபா காமிச்சா போதுமே பக்கம் பக்கமா டையலாக் வருமே, தெரியாமதான் கேக்கெற, இப்போ என்க்கு இன்னா பொளசு வந்துடுச்சுன்னு, இப்டி பொலம்புற।
குமரன்: மச்சி, உ லெவலு உனக்கு தெரியாது, என்று அலுத்துகொண்டான்.
ரமேஷ்: இன்னா லெவலு பொரிய கொத்தனார் லெவலு, ஓஞ்ஞி ஆஞ்ஞி பீராஞ்ஞாலும் மாசம் 400 ரூவா பொரட்ட முடியல, பேருக்கு தான் நகர சுத்தி தொழிலாளி, இதுக்கு பதிலா நகசுத்தி தொழிலாளி சொல்லியிருந்தாலும் நாலு எலும்பிச்ச பழமாவது கடச்சுருக்கும், என்று புலம்பினான் புதிதாக கார்பரேஷன் கான்ட்ராக்ட் வேலையில் சேர்ந்திருக்கும் ரமேஷ்।

குமரன்: சரி உட்ரா, ரொம்ப சீன் போடாத, ஒரு பன்னு சொல்லு,
ரமேஷ்: ஏ போதும் போ!॥ இருக்குற 5 ரூவாக்கு, அமித்தாபசன் ரேஞ்ல ஆடர் பன்னாத, இப்போ டீ எங் கணக்கு சாங்காலம் டீ, பண்ணு உங்கணக்கு, இன்னா சரியா
குமரன்: நவாப்பே நக்குறாரு குதுர கோதும ரொட்டி கேட்ட கதையா இருக்கே, என்று சொல்லிக்கொண்டே நழுவினான்
ரமேஷ்: காசு கேட்டா காத்தாடியா பரந்துடுவான்களே।
போன வேகத்திலேயே திரும்பி வந்தான் குமரன்,
ரமேஷ்: இன்னாட பிரெக் டவுன்னான பஸ் டிப்போக்கு வந்த மாதிரி, திரும்பி வர,
குமரன்: அதலா ஒம்மில்லை, கலா உன்ன தேடுறா அதான் சொல்லிட்டு போலாமுன்னு வந்தேன்। கலாவ கலாசிடியா இன்னா,
ரமேஷ்: ஆம்மாட அவதா டிவி டேஷன்ல வேல செய்றால 100ரூவா கடங்கேட்டன் ஒவ்வர சீன் போட்ட, ஆதான் நேயர் விருப்பம் வரும்போது நாயர் கடையிலிருந்து ஒரு போன் போட்டு கலாசிட்டேன், மச்சான் அவ வரா, நா ஒரகட்றேன், காண்டுல போட்டு கீட்டு குடுத்துடாத, சாங்காலம் பரோட்டாவே வாங்கித்தறேன்.
கலா: எங்கடா அந்த நாயி, உங் கூடதானே சுத்திகின்னு இருப்பா எங்க அவ, போனா போவுது ஏரியா பையனாச்சே அஞ்ஞாங் கிலாஸ் வரைக்கும் கூட படிச்சவனாச்சேனு பழகுனா வேல செய்ற எடத்துக்கெல்லாம் போன் போட்டு காலாய்கிறான்,
குமரன்: அப்டி இன்னாதான் உன்ன கலாச்சான்,
கலா: இன்னா காலாச்சான!? நேயர் விருப்பம் ப்ரோகிறாம் நடந்துனு இருக்கு ஒரு போன் வந்தது, சிரி நேயர்தான் போன் பன்றாங்கனு பாத்தா இந்த நாயி,
குமரன்: சரி அப்டி இன்னாதாக் கேட்டான்,
கலா: காசு கேட்டா கூட குடுத்துட்டுருப்பேன்,
குமரன்: சரி இன்னா நடந்துச்சுன்னு சொல்லு,
கலா: பேரு என்னானு கேட்டா பொனம்னு சொல்றான், சரி என்ன பாட்டு வேனும்னு கேட்டா "ஜனகனமன" போடுங்கனு சொல்றான், எந்த படத்திலிருந்து காட்சினு கேட்டா, நல்ல பாம்பு எடுக்குமே அந்த படத்துலேந்து காமடி போடுங்கனு சொல்றான், கடசில அடமொழில ஏரியாவ சொல்லி போர வேர சொல்றான்। அப்போதான் தெரிஞ்ஜது இந்த நாய்தான் போன் பன்னதுனு, உங்ககூட சவகாசம் வச்சதுக்கு இதுவும் வேனு இன்னமும் வேனும்.
நாயர் கடை பினாலிருந்து ரமேஷ்,
ரமேஷ்: இன்னாடா வேனும் வேனும்னு இன்னமோ சொல்லிகினே போறா,
குமரன்: டேய் இதல்லாம் ரொம்ப ஓவர்டா!
ரமேஷ்: இத எ எங்கிட்ட சொல்ற மேக்கப் ஒவரயிருந்த அவகிட்ட சொல்லு
குமரன்: இதுக்கொல்லாம் எவனாவது உனக்கு ஆப்புவெப்பான்
அதற்குள் கார்பரேஷன் லாரி வந்தது, டேய் ரமேஷே டைம் ஆயிடுச்சு வேலைக்கு வரலியா, என்று லாரியிருந்து குரல் வந்தது।

ரமேஷ்: இருங்கடா வறேன், பெரிய வேல நாவப்புகிட்ட ஜாவாப்பு வேல, ....
தொடரும்...