Tuesday, August 5, 2008

சில நேரங்களில் - பாகம் 1

ஆயிரம்தான் சொல்லு, உன்ன மாதிரி வராதுடா; பணம், காசு, பொளசு, வந்தாலும், பழச மறக்காமல், என்று பேசி முடிப்பதற்க்குள், ரமேஷ் குறுக்கிட்டு, போதும் நிருத்துடா ஒரு டம்லர் எச்ச டீக்கு ஒருப்பக்க டையலாக், 10 ரூபா காமிச்சா போதுமே பக்கம் பக்கமா டையலாக் வருமே, தெரியாமதான் கேக்கெற, இப்போ என்க்கு இன்னா பொளசு வந்துடுச்சுன்னு, இப்டி பொலம்புற।
குமரன்: மச்சி, உ லெவலு உனக்கு தெரியாது, என்று அலுத்துகொண்டான்.
ரமேஷ்: இன்னா லெவலு பொரிய கொத்தனார் லெவலு, ஓஞ்ஞி ஆஞ்ஞி பீராஞ்ஞாலும் மாசம் 400 ரூவா பொரட்ட முடியல, பேருக்கு தான் நகர சுத்தி தொழிலாளி, இதுக்கு பதிலா நகசுத்தி தொழிலாளி சொல்லியிருந்தாலும் நாலு எலும்பிச்ச பழமாவது கடச்சுருக்கும், என்று புலம்பினான் புதிதாக கார்பரேஷன் கான்ட்ராக்ட் வேலையில் சேர்ந்திருக்கும் ரமேஷ்।

குமரன்: சரி உட்ரா, ரொம்ப சீன் போடாத, ஒரு பன்னு சொல்லு,
ரமேஷ்: ஏ போதும் போ!॥ இருக்குற 5 ரூவாக்கு, அமித்தாபசன் ரேஞ்ல ஆடர் பன்னாத, இப்போ டீ எங் கணக்கு சாங்காலம் டீ, பண்ணு உங்கணக்கு, இன்னா சரியா
குமரன்: நவாப்பே நக்குறாரு குதுர கோதும ரொட்டி கேட்ட கதையா இருக்கே, என்று சொல்லிக்கொண்டே நழுவினான்
ரமேஷ்: காசு கேட்டா காத்தாடியா பரந்துடுவான்களே।
போன வேகத்திலேயே திரும்பி வந்தான் குமரன்,
ரமேஷ்: இன்னாட பிரெக் டவுன்னான பஸ் டிப்போக்கு வந்த மாதிரி, திரும்பி வர,
குமரன்: அதலா ஒம்மில்லை, கலா உன்ன தேடுறா அதான் சொல்லிட்டு போலாமுன்னு வந்தேன்। கலாவ கலாசிடியா இன்னா,
ரமேஷ்: ஆம்மாட அவதா டிவி டேஷன்ல வேல செய்றால 100ரூவா கடங்கேட்டன் ஒவ்வர சீன் போட்ட, ஆதான் நேயர் விருப்பம் வரும்போது நாயர் கடையிலிருந்து ஒரு போன் போட்டு கலாசிட்டேன், மச்சான் அவ வரா, நா ஒரகட்றேன், காண்டுல போட்டு கீட்டு குடுத்துடாத, சாங்காலம் பரோட்டாவே வாங்கித்தறேன்.
கலா: எங்கடா அந்த நாயி, உங் கூடதானே சுத்திகின்னு இருப்பா எங்க அவ, போனா போவுது ஏரியா பையனாச்சே அஞ்ஞாங் கிலாஸ் வரைக்கும் கூட படிச்சவனாச்சேனு பழகுனா வேல செய்ற எடத்துக்கெல்லாம் போன் போட்டு காலாய்கிறான்,
குமரன்: அப்டி இன்னாதான் உன்ன கலாச்சான்,
கலா: இன்னா காலாச்சான!? நேயர் விருப்பம் ப்ரோகிறாம் நடந்துனு இருக்கு ஒரு போன் வந்தது, சிரி நேயர்தான் போன் பன்றாங்கனு பாத்தா இந்த நாயி,
குமரன்: சரி அப்டி இன்னாதாக் கேட்டான்,
கலா: காசு கேட்டா கூட குடுத்துட்டுருப்பேன்,
குமரன்: சரி இன்னா நடந்துச்சுன்னு சொல்லு,
கலா: பேரு என்னானு கேட்டா பொனம்னு சொல்றான், சரி என்ன பாட்டு வேனும்னு கேட்டா "ஜனகனமன" போடுங்கனு சொல்றான், எந்த படத்திலிருந்து காட்சினு கேட்டா, நல்ல பாம்பு எடுக்குமே அந்த படத்துலேந்து காமடி போடுங்கனு சொல்றான், கடசில அடமொழில ஏரியாவ சொல்லி போர வேர சொல்றான்। அப்போதான் தெரிஞ்ஜது இந்த நாய்தான் போன் பன்னதுனு, உங்ககூட சவகாசம் வச்சதுக்கு இதுவும் வேனு இன்னமும் வேனும்.
நாயர் கடை பினாலிருந்து ரமேஷ்,
ரமேஷ்: இன்னாடா வேனும் வேனும்னு இன்னமோ சொல்லிகினே போறா,
குமரன்: டேய் இதல்லாம் ரொம்ப ஓவர்டா!
ரமேஷ்: இத எ எங்கிட்ட சொல்ற மேக்கப் ஒவரயிருந்த அவகிட்ட சொல்லு
குமரன்: இதுக்கொல்லாம் எவனாவது உனக்கு ஆப்புவெப்பான்
அதற்குள் கார்பரேஷன் லாரி வந்தது, டேய் ரமேஷே டைம் ஆயிடுச்சு வேலைக்கு வரலியா, என்று லாரியிருந்து குரல் வந்தது।

ரமேஷ்: இருங்கடா வறேன், பெரிய வேல நாவப்புகிட்ட ஜாவாப்பு வேல, ....
தொடரும்...

No comments: