Monday, October 27, 2008

விட்டுக்கொடுப்பதில்தான் வாழ்க்கை இனிக்கிறது

அறுபது ஆண்டு இல்லற வாழ்க்கையில் அந்தத்தம்பதிகள் தங்களுக்குள் எதையும் ரகசியமாக வைத்துக் கொண்டதில்லை. ஒரே ஒரு விஷயத்தைத் தவிர.

அது.....அந்தப்பெண்மணி தனது கட்டிலுக்குகீழே வைத்திருக்கும் ஒருபெட்டியை மாத்திரம் கணவர் திறந்து பார்க்க அனுமதிதரவில்லை.
அதைப்பற்றி அவர் ஏதும் கேட்கக்கூடாது என்று அவள் சொல்ல, அவரும் கண்ணியமாகவே நடந்து கொண்டார்.


முதுமையின் காரணமாக அவள் உடம்பு சீர்கெட்டது. டாக்டர்வந்துபார்த்து அவளது மரணத்தை தவிர்க்கமுடியாது என்று கூறவும் அவள் அந்தப்பெட்டியைத் திறந்துபார்க்க கணவருக்கு அனுமதி தந்தாள்.
அவர் பெட்டியை ஆவலுடன் திறந்தார்.

உள்ளே அழகான இருபொம்மைகளூம் நிறையப்பணமும் (ஒருலட்சம் ரூபாய்வரை) இருந்தன.

கணவர் கேள்விக்குறியோடு மனைவியைப் பார்த்தார்.

அவள் சொன்னாள்." 'சந்தோஷமான வாழ்க்கையின் ரகசியமே வாக்குவாதங்களைத் தவிர்ப்பதில்தான் இருக்கிறது 'என்று என்கல்யாணத்தின் போது என் அம்மா எனக்கு அறிவுரை சொன்னார், அதனால்
நீங்கள் எது சொன்னாலும் நான் எதிர்த்துப்பேசினதில்லை.

எனக்குப்பிடிக்காதவிஷயங்களை நீங்கள் செய்யும்போது எனக்குக்கோபமாய் வரும். அப்போது வாக்குவாதம் செய்யாமல் பொம்மைகள் செய்து என்கோபத்தை தணித்துக்கொள்வேன்" என்றாள்.

கணவர் பெட்டியிலிருந்த இரண்டுபொம்மைகளைப்பார்த்துவிட்டு," 60வருட வாழ்க்கையில் 2தடவைமட்டுமே உன்னை நான் கோபப்படுத்தி இருக்கிறேன்" என்றார் ஆறுதலான குரலில்.

பிறகு," ஆமாம் இத்தனை பணம் உனக்கு எப்படி வந்தது?' என்று கேட்டார்.
"பொம்மைகள் சேரச்சேர அவற்றை விற்றுவிடுவேனே ?' என்று மனைவி சொன்னதும் கணவர் அப்படியே மயங்கிச் சரிந்துவிட்டார்!

விட்டுக்கொடுப்பதில்தான் வாழ்க்கை இனிக்கிறது!!!



Connect with friends all over the world. Get Yahoo! India Messenger.

Thursday, October 23, 2008

Happy Dewali!

Hosted by FreeImageHosting.net Free Image Hosting Service

Friday, October 17, 2008

உண்மையான பணக்காரன்

அவன் பெயர் மணி. ஆனால் இவ்வூர்காரர்கள் உச்சரிப்பில் அவனை மாணி என்றாக்கி விட்டார்கள். 2001-ல் 400K விலை கொடுத்து நியூஜெர்சியில் ஒரு வீட்டை வாங்கினான். 2006-ல் அவன் தன் வீட்டு மதிப்பை வல்லுனர்களை வரவழைத்து கணக்கிட்டான்.600K வென சொல்லிப் போனார்கள். அதாவது 200K லாபம். மகிழ்ச்சியில் கொண்டாடினான். இஷ்டத்துக்கும் செலவு செய்தான். சேமிக்க ரொம்பவும் யோசித்தான். மீண்டும் இவ்வருடம் அவன் வீட்டு மதிப்பை வல்லுனர்களை வரவழைத்து கணக்கிட்டான். 375K என்றார்கள். மாணிக்கு மாரடைப்பே வந்துவிட்டது. இப்போது சொல்லுங்கள், அவனுக்கு 225K நஷ்டம் வர யார் காரணம்? அப்பணம் எங்கே போனது? யாராவது கொள்ளை கொண்டு போனார்களா? அல்லது அரபுநாட்டுக்குப்போனதா? இல்லையே. இப்படித்தான் பில்லியன்கணக்கில் டாலர்கள் வால்தெருவில் காற்றில் கரைந்து போயின. ஃபைனான்ஸ் வங்கிக்காரர்களால் சொல்லப்பட்டு வந்த பெரிய புள்ளிவிவர எண்களெல்லாம் வெறும் fake number-களாகிப்போயின.

இப்படி செயற்கையாய் போலி எண்களால் உருவான போலி பிரமாண்டம் இப்படி அநியாயத்துக்கும் விழுந்து நொறுங்கியது ஒரு வகையில் நல்லதே. தன்னைத்தானே சரிசெய்து கொள்ள பொருளாதாரம் என்ற அந்த அப்பாவி முயன்றது. ஆனாலும் அதை தன்னைத்தானே சரிசெய்ய விடாமல் அந்த போலி எண்களை காப்பாற்ற நிஜமாய் நோட்டுகள் அடித்து பணத்தின் மதிப்பை வெகுதாழ கொண்டு செல்லவிருக்கின்றார்கள். தற்காலிகமாய் சந்தையை காப்பாற்ற உலவ விடப்படும் பல நூறு பில்லியன் டாலர்கள் தீர்வானது கார் இஞ்சின் இரைச்சலை போக்க வானொலி சத்தத்தை அதிகப்படுத்துவது போன்றதாகும். நிஜ ஆரோக்கியத்தை அது தராது. எனினும் இன்னொரு கிரேட் டிப்ரசனை தவிர்க்க உலகநாடுகள் இதில் அபூர்வமாய் ஒருங்கிணைந்துள்ளன. உலக அளவில் ஒரு ரெசர்வ் பாங்கின் அவசியத்தையும்
உலகளாவிய ஒரே கரன்சியின் அவசியத்தையும் இச்சிக்கல் நமக்கு வலியுறுத்தியுள்ளது.

இனி என்ன நடக்கும்.இன்று போல் தொடர்ந்து பங்குசந்தைகள் முன்னேறி நிலமை சரியானால் இன்னும் விலைவாசி இரண்டு மடங்கு ஏறும்.டாலர் அப்படியே கீழாக குட்டிகரணமடிக்க தங்கமும் பெட்ரோலும் விர்ரென மேலே ஏறத்தொடங்கும்.சந்தையில் புழக்கத்தில் விடப்பட்ட பணங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் சாதாரண ஜனங்களை வந்து எட்டும்.வந்து நிறையவே வாட்டும்.அது அப்படியே போய்விட்டால் நல்லது.இன்னும் ஒரு சிலர் ஒரு படி மேலேபோய் ஹைப்பர் இன்ஃபிளேசன், ஃபுட் ரையாட்ஸ், மார்சியல் லா, மில்லியன் பேர்களை அடைக்க வசதி கொண்ட ரகசிய அண்டர்கிரவுண்ட் ஜெயில்கள், கவர்ண்மென்ட் கிராஷ் அப்படி இப்படியென பல கதைகள் சொல்கின்றார்கள்.

இந்த விளையாட்டில் அணில் அம்பானி இழந்தது 30 பில்லியன் டாலர்களாக்கும். சம்பாதிப்பது மட்டுமல்ல சம்பாதித்ததை தக்கவைப்பததற்கும் ரொம்ப பிராயசப்படவேண்டியிருக்கின்றது. இப்போதெல்லாம் தினமும் நிம்மதியாய் உங்களால் தூங்கமுடிகிறதென்றால் நீங்கள் தான் உண்மையான பணக்காரர்.

நுண்கடன் மற்றும் கர்மா

2006-ஆம் ஆண்டு சமாதானத்துக்கான நோபல் பரிசு வங்காளதேசத்தை சேர்ந்த பெரியவர் முகம்மது யூனுஸ் அவர்களுக்கு கிடைத்தது. அப்போதுதான் "மைக்ரோ கிரெடிட்" பற்றிய அறிமுகம் எனக்கு கிடைத்தது. தேவையிலிருக்கும் பல்லாயிரக்கணக்கான ஏழைமக்களுக்கு சிறுகடன் வழங்கி அவர்களை ஏதாவது ஒரு தொழில் செய்ய ஊக்குவித்து அதன்மூலமாக வளர்ந்து வரும் பல நாடுகளில் பெரிய அமைதிப் புரட்சியே செய்து கொண்டிருக்கின்றார் இம்மனிதர்.

25 டாலர் கொண்டு நாம் என்னத்தை சாதித்து விடப்போகின்றோம் என யோசித்துக் கொண்டிருக்கையில் அதே 25 டாலரை எதாவது ஒரு கால்நடையிலோ அல்லது கைத்தொழிலோ முதலாக்கி உங்கள் இந்த சிறு உதவியினால் தங்கள் வாழ்க்கையை ஓட்ட இங்கு கோடிக்கணக்கில் மக்களிருக்கின்றார்கள்.

இந்த மைக்ரோஃபைனான்சிங் மூலம் உலகின் எங்கோ ஒரு மூலையிலிருக்கும் ஒரு ஏழைக்கு 25 டாலர் வழங்குகின்றீர்கள் என வைத்துக்கொள்வோம். அவன் அதனைக் கொண்டு ஒரு சிறு தொழில் செய்து தன் பிழைப்பை ஓட்டுகின்றான். ஆறுமாதம் கழித்தோ அல்லது ஒரு வருடம் கழித்தோ அப்பணம் அப்படியே உங்களிடம் திரும்பிவந்து விடும். கர்மாவில் உங்களுக்கு நம்பிக்கையிருந்தால் அதுவும் அதனோடு சேர்ந்து வரும்.

இப்படி சிறு சிறு கடனுதவிகளை மைக்ரோகிரெடிட்களாக ஆங்காங்கே தவிக்கும் பல நெஞ்சங்களுக்கு கொடுத்து உதவ ஆன்லைனிலேயே வழியிருக்கின்றது.
http://www.kiva.org

இங்கு நீங்களே யாருக்கு நிதி உதவப்போகின்றீர்கள் என ஒவ்வொருவரின் ப்ரொபைலையும் படித்து ஒரு முடிவுக்கு வரலாம். ஒருவேளை உங்கள் தொழிலை அபிவிருத்தி செய்ய நீங்களே கூட கடன்கேட்க விரும்பினாலும் இங்கு உங்கள் திட்டங்களை விவரித்து நீங்களும் நுண்கடன் கேட்கலாம்.

மற்றபடி மார்வாடி கணக்காய் வட்டிக்கு கடன் கொடுக்க/வாங்க திட்டமிருந்தால்
http://www.prosper.com -க்கு போங்கள். நியாபகமிருக்கட்டும், இரண்டிலுமே ரிஸ்க் இருக்கின்றது.

Wednesday, October 15, 2008

33 நாட்டில் பசி கொடுமை

உலக அளவில் இந்தியா உணவு தானிய உற்பத்தியில், அதை ஏற்றுமதி செய்வதிலும் முன்னனியில் இருக்கிறது. நடப்பு 2006-07-ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த உணவு தானிய உற்பத்தி 209.2 மில்லியன் டன்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அதே இந்தியா பசிகொடுமையில் உலக அளவில் 66 ஆம் இடத்தில் இருக்கிறது. ( 6th among 88 developing countries)
வாஷ்ங்டனில் 2008 Food Policy Research Institute (IFPRI) ரிப்போர்டில், 33 நாட்டில் பசி கொடுமை ஒரு முக்கிய பிரச்சனையாக கண்டறியப்பட்டுள்ளது. அதில் இந்தியாவும் அடங்கும்.

இந்தியாவில் 17 முக்கிய மாநிலங்களில் மத்திய பிரதேசம் மிக மோசமான நிலமையில் இருக்கிறது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் பசிக்கொடுமை முற்றிலும் இல்லாமல் இல்லை என்பது கசப்பான உண்மை.

தேர்தலில் நாம் தேர்ந்தடுக்கும் உறுப்பினர்கள் முக்கால்வாசி பேர் உருப்படியாக எதுவும் செய்வதில்லை, இவர்களை தேர்ந்தெடுக்க ஆகும் தேர்தல் செலவை இந்த மாதிரி பசியால் வாடுபவர்களுக்கு கொடுத்தால் அடுத்த ஜன்மத்தில் மினி இட்லி ஒரு பிளேட்டாவது கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

வைரஸ்கள்

வைரஸ்கள் நம்மைத்தேடி வருவதைவிட அவைகளை நாமாய்த்தேடிப் போய் வலிய இழுத்துவருவது தான் இன்றைய டிரண்ட். இரண்டு வாரத்துக்கொருமுறை தனது லேப்டாப்பை ஃபார்மேட் செய்ய கோபால் கொண்டுவருகின்றான். எல்லாம் வைரஸ் தொல்லை தான். அது என்ன வைரஸ் என கண்டுபிடித்து அதை நீக்கும் வழி கண்டுபிடித்து அதை நீக்கினாலும் ஏனோ மனது கேட்பதில்லை. ஏர்லைன்சில் பயணச்சீட்டு முன்பதிவு செய்வதிலிருந்து ஈபேயில் நோக்கியா 6300க்கு Plantronics புளூடூத் ஹெட்செட் வாங்குவதுவரை எல்லாமே இந்த மடிக்கணிணி வழிதான். ஒரு முறை அட்டாக் ஆன கணிணியை முழுசாய் நம்பக்கூடாது என்பர் கணிணித்துறை பாதுகாப்பு வல்லுனர்கள். போகும் போது அது என்னவெல்லாம் விட்டுவிட்டுப் போனதோ என்ற சந்தேகம் தான். யாருக்குத் தெரியும்?இணையம் வழி வரும் கணிணி வைரஸ்களிலிருந்து விலகியிருக்க நான் பின்பற்றும் சில வழிமுறைகளை இங்கே கொடுக்கின்றேன். எனக்கு இவை வொர்க் அவுட் ஆகின்றன. ஒருவேளை உங்களுக்கும் வொர்க் அவுட் ஆகலாம்.

1. விண்டோஸ் ஃபயர்வால் எப்போதும் “ON" அல்லது “Enable" நிலையிலேயே இருக்கட்டும்.இது ரொம்பவும் முக்கியம். இது தான் உங்கள் கணிணிக்குள் வேண்டா விருந்தினர்களை உள்ளே விடாமல் தடுத்துக்கொண்டிருப்பது.
2. ஒவ்வொரு இரண்டாவது செவ்வாய்கிழமையும் மைக்ரோசாப்ட் வெளியிடும் ”தட்டல் ஒட்டல்”களை நாமும் உடனடியாக நிறுவிக்கொள்ளவேண்டும்.I mean Windows updates. http://www.update.microsoft.com/
3. மைக்ரோசாப்டின் இலவச வெளியீடான Windows Defender-ஐ இறக்கம் செய்து நிறுவிக்கொள்ளலாம்.
4. கூகிள் வழங்கும் இலவச மென்பொதியான “Google Pack”-க்கோடு Norton Security Scan-ம் Spyware Doctor-ம் இலவசமாய் கிடைக்கின்றது. விட்டுவைப்பது ஏன். அதையும் தெரிவுசெய்து நிறுவி வைத்துக் கொள்ளுங்கள். http://pack.google.com/
5. சில 4shared.com போன்ற கோப்புவழங்கிகள் அவைகளில் ஏற்றம்/இறக்கம் செய்யப்படும் கோப்புகளை வைரஸ் ஸ்கேன் செய்வதுண்டு. ஆனால் Rapidshare போன்ற பிரபல பல கோப்புவழங்கிகள் இவ்வாறு வைரஸ் ஸ்கேன் செய்வதில்லை. இதனால் இவற்றிலிருந்து இறக்கம் செய்யப்படும் கோப்புகள் உங்கள் கணிணிக்கு அபாயம் தரலாம்.
6. ஆடியோ வீடியோ போன்ற கோப்புகளை தைரியமாக இறக்கம் செய்து கொள்ளலாம்.ஆனால் exe கொண்ட பயன்பாட்டு கோப்புகளை இறக்கம் செய்து அப்படியே நம் கணிணியில் ஓடவிடுவது அவ்வளவு நல்லதல்ல. எல்லா பயன்பாட்டு மென்பொருள்களையும் நம்பத்தகுந்த தளங்களிலிருந்தே இறக்கம் செய்குதல் தகும்.
7. பெரும்பாலான கிராக் செய்யப்பட்ட மென்பொருள்கள் கூடவே இலவசமாக ஒரு வைரசோடுத்தான் வருகின்றவாம்.
8. சில தளங்கள் மின்னிமின்னி ரொம்ப அக்கரையாய் காட்டும் ”உங்கள் கணிணியின் பெர்பாமண்ஸ் சரியில்லை.அதை சரிசெய்யவா?” அல்லது ”உங்கள் கணிணியில் வைரஸ் உள்ளது.அதை சரி செய்யவா?” என கேட்பதெல்லாம் டூப்புகள். ஒரு போதும் இது போன்ற கேள்விகளுக்கு ”ஓக்கே” சொல்லக்கூடாது. ”கேன்சல்” செய்து விடவேண்டும்.
9. அது போலவே முகமறியாதளங்கள் கொடுக்கும் ActiveX control களையும் இறக்கம் செய்து நிறுவிவிடாதீர்கள். ரொம்ப ரொம்ப டேஞ்சர். அது என்னவென உங்களுக்கு தெரியாவிட்டால் எப்போதும் “Cancel"-ஐயே கிளிக்குங்கள். உண்மையிலேயே நீங்கள் என்ன செய்கின்றீர்கள் என தெரிந்து செய்தால் மட்டும் “OK" கிளிக்குங்கள்.
10. இது தவிர AVG, Avira, Avast போன்ற இலவச ஆண்டிவைரஸ்களில் ஏதாவது ஒன்றை இறக்கம் செய்து நிறுவிவைத்துக்கொண்டு அவற்றின் definition-களையும் அவ்வப்போது சமகாலத்திற்கு அப்டேட் செய்து கொண்டு வந்தால் பெரும்பாலான வைரஸ் தொல்லைகளை நாம் தடுக்கலாம்.

தூக்கம் விற்ற காசுகள்


Tuesday, October 7, 2008

வித்தியாசமான கிராமங்கள்

திருவாரூர் அருகே கடந்த 50 வருடங்களுக்கு மேலாக தீபாவளி பண்டிகையை கொண்டாடாத பல கிராமங்கள் உள்ளன.நாடு முழுவதும் தீபாவளி திருநாள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இந்த கிராமங்களில் ஊர் கட்டுப்பாடு காரணமாக தீபாவளியே கொண்டாடப்படுவதில்லையாம்.திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ரிஷியூர், பச்சக்குளம், பண்டாரஓடை, நன்மங்கலம், வரதராஜபெருமாள் கட்டளை, பனங்களத்தூர் ஆகிய கிராமங்ம் தான் தீபாவளி கொண்டாடாத கிராமங்கள்.மேலும் புதிதாக திருமணம் முடிந்த தம்பதிகளுக்கும் தலை தீபாவளி என்பதே இங்கு கிடையாதாம். குழுந்தைகள், பெரியோர்கள் உட்பட யாரும் தீபாவளிக்கு புதுத் துணி அணிய மாட்டார்களாம்..இது குறித்து ரிஷியூர் கிராமத் தலைவர் மருதமுத்து சோனாடு கொண்டார் (73) கூறுகையில்,இந்த கிராமங்களில் எல்லாம் கடைசியாக கடந்த 1954ம் வருடம் தான் தீபாவளி கொண்டாடப்பட்டது. அதன் பின்னர் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது கிடையாதுஇதற்கு காரணம், 1955ம் ஆண்டுக்கு முன் தற்போது உள்ளது குறுவை சாகுபடி கிடையாது. ஒருபோக சாகுபடி மட்டுமே செய்து வந்த விவசாயிகள் வருமானமின்றி சிரமப்பட்டு வந்தனர். அந்த நேரத்தில் தான் தீபாவளி பண்டிகை வந்தது.இதற்காக துணி, பலகாரம் வாங்க பணமில்லாமல் பல இடங்களில் அநியாய வட்டிக்கு வாங்கி தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்கள். பின்னர் அந்த கடனை அடைக்க முடியாமல் திணறினர். அதில் பல குடும்பங்கள் அழிந்தன.
அன்றிலிருந்து தீபாவளி பண்டிகை கொண்டாடுவதில்லை என்று முடிவு செய்யப்பட்டது. இது தான் ஊர் கட்டுப்பாடு. அது மட்டுமில்லாமல் தீபாவளி பண்டிகை தமிழர் திருநாள் கிடையாது. பொங்கல் தான் நம் பண்டிகை. தீபாவளி அன்று ஊர்க் கட்டுப்பாட்டை மீறுவருக்கு அபராதம், தண்டனை விதிக்கப்படும். இதனால் தான் இந்த கிராம பகுதிகளிலிருந்து பெண்ணை திருமணம் செய்து கொண்டவர்கள் தீபாவளி சீரும் கேட்பதில்லை என்றார்.
மிக வித்தியாசமான கிராமங்கள்..
please comment below or mail me