Monday, October 27, 2008

விட்டுக்கொடுப்பதில்தான் வாழ்க்கை இனிக்கிறது

அறுபது ஆண்டு இல்லற வாழ்க்கையில் அந்தத்தம்பதிகள் தங்களுக்குள் எதையும் ரகசியமாக வைத்துக் கொண்டதில்லை. ஒரே ஒரு விஷயத்தைத் தவிர.

அது.....அந்தப்பெண்மணி தனது கட்டிலுக்குகீழே வைத்திருக்கும் ஒருபெட்டியை மாத்திரம் கணவர் திறந்து பார்க்க அனுமதிதரவில்லை.
அதைப்பற்றி அவர் ஏதும் கேட்கக்கூடாது என்று அவள் சொல்ல, அவரும் கண்ணியமாகவே நடந்து கொண்டார்.


முதுமையின் காரணமாக அவள் உடம்பு சீர்கெட்டது. டாக்டர்வந்துபார்த்து அவளது மரணத்தை தவிர்க்கமுடியாது என்று கூறவும் அவள் அந்தப்பெட்டியைத் திறந்துபார்க்க கணவருக்கு அனுமதி தந்தாள்.
அவர் பெட்டியை ஆவலுடன் திறந்தார்.

உள்ளே அழகான இருபொம்மைகளூம் நிறையப்பணமும் (ஒருலட்சம் ரூபாய்வரை) இருந்தன.

கணவர் கேள்விக்குறியோடு மனைவியைப் பார்த்தார்.

அவள் சொன்னாள்." 'சந்தோஷமான வாழ்க்கையின் ரகசியமே வாக்குவாதங்களைத் தவிர்ப்பதில்தான் இருக்கிறது 'என்று என்கல்யாணத்தின் போது என் அம்மா எனக்கு அறிவுரை சொன்னார், அதனால்
நீங்கள் எது சொன்னாலும் நான் எதிர்த்துப்பேசினதில்லை.

எனக்குப்பிடிக்காதவிஷயங்களை நீங்கள் செய்யும்போது எனக்குக்கோபமாய் வரும். அப்போது வாக்குவாதம் செய்யாமல் பொம்மைகள் செய்து என்கோபத்தை தணித்துக்கொள்வேன்" என்றாள்.

கணவர் பெட்டியிலிருந்த இரண்டுபொம்மைகளைப்பார்த்துவிட்டு," 60வருட வாழ்க்கையில் 2தடவைமட்டுமே உன்னை நான் கோபப்படுத்தி இருக்கிறேன்" என்றார் ஆறுதலான குரலில்.

பிறகு," ஆமாம் இத்தனை பணம் உனக்கு எப்படி வந்தது?' என்று கேட்டார்.
"பொம்மைகள் சேரச்சேர அவற்றை விற்றுவிடுவேனே ?' என்று மனைவி சொன்னதும் கணவர் அப்படியே மயங்கிச் சரிந்துவிட்டார்!

விட்டுக்கொடுப்பதில்தான் வாழ்க்கை இனிக்கிறது!!!



Connect with friends all over the world. Get Yahoo! India Messenger.

1 comment:

Chitra said...

Hi,
This is very very nice.