| ஒருதந்தையும் மகனும் மலைகள் சூழ்ந்த பகுதியில் ஒரு மலைமீது ஏறி அதன் உச்சியை நோக்கி நடந்துகொண்டிருந்தார்கள். திடிரென மகன் கல் ஒன்றுதடுக்கி கீழே தடுமாறிவிழுந்துவிட்டான், ஆ.. என்று கத்தினான். ஆ.. என்று எதிரொலி வந்தது. என்ன இது என்றான் என்ன இது என்று மறுபடி எதிரொலிகேட்டது. என்ன நடக்கிறதெனப்புரியாமல் சிறுவன் தந்தையை குழப்பமாய் பார்த்தான். புன்னகைபுரிந்தபடியே அந்தத்தந்தை மலையை நோக்கிக்கூவினார். நான் உன்னைப்பார்த்து ஆச்சரியப்படுகிறேன் என்றார். நன் உன்னைப்பார்த்து ஆச்சரியப்படுகிறேன் என பதில்வந்தது. நீ ஒரு வீரன் என்றார் அதே பதிலாக வந்தது. வியப்புடன் தன்னையே பார்த்துக்கொண்டிருந்த மகனிடம் அவர் சொன்னார். :இதனை எதிரொலி என்பர்கள். ஆனால் ,மகனே! உண்மையில் இதுதான் வாழ்க்கை ! வாழ்க்கை என்பது நமது செயல்களின் பிரதிபலிப்பே! இந்த உலகத்தில் உனக்கு நிறைய அன்பு வேண்டுமானால் நீ நிறைய அன்பு செலுத்தவேண்டும் .உன் இதயத்தில் அன்பு சுரக்கவேண்டும். நட்பு பெருகவேண்டுமானால் நீ பிறரோடு நட்பாய் இரு. வாழ்க்கை, இந்த உலகிற்கு நீ எதைக்கொடுக்கிறாயோ அதனையே திருப்பிக்கொடுக்கும்!: |
Monday, December 15, 2008
வாழ்க்கை
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment