| கடுகு சாம்பாரில்,கூட்டில்,பொறியலில் என்று தாளிக்கிறோம் முதல்மரியாதை தாளிதம் செய்வதில் கடுகாருக்கே உண்டு. சரி இது எதுக்குன்னு தெரியுமா? எனக்கும் போனமாசம்வரைதெரியாது. இதுபோல பலவிஷயங்கள் தெரியாது ஆனா ஏதோ பழக்கம்போல செய்துட்டு வரோம்! கடுகுபற்றிய விஷயம் ஆச்சரியமா இருந்தது. கடுகு சிறுத்தாலும் காரம்குறையாது என்பதற்கான உண்மையும் புரிஞ்சது! உங்களில் பலருக்கு தெரிஞ்சிருக்கலாம்...அவங்க அப்படி நகர்ந்துடுங்க.. இது என்னைமாதிரி தெரியாதங்களுக்கு மட்டும்! கடுகில ஒருசங்கதி நம் உடலுக்கு தேவைப்படுதாம், அது என்னனு பார்த்தால் . கால்ஷியம் புரோட்டின் கார்போஹைட்ரேட் மங்னிஷியம் எல்லாம் நாம் சாப்பிட்ற உணவுலகிடைக்குது ,ஆனா எந்த ஒரு உணவுப்பொருளிலும் கிடைக்காத ஒருதாதுப்பொருள் கடுகுல கிடைக்குது. "கடுகில இருப்பது சல்ஃப்ர். அதாவது கந்தகம். இந்த சல்பர் நம் உடலின் ஆரோக்கியத்துக்கு சிறிதளவே தேவைப்படுது...கடுகை கொதிக்கிற எண்ணைல போட்டதும் வெடிப்பதுக்கு அதான காரணம்." (பட்டாசு வெடிக்கறதுக்கு துணைசெய்வது கந்தகம்தான்னு நமக்கு தெரியும்.) கந்தகம் மனிதனின் ஆரோக்கியத்துக்கு மிகச்சிறிய அளவில்தேவைப்படுவதால் அதனை சின்னகடுகில் ஒளித்துவைத்த கடவுள் பெரியவர் தான் இல்லையா? |
Monday, November 10, 2008
கடுகு
Labels:
information
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment